செய்திகள்
பொதுத்தேர்வு

சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ- மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி

Published On 2020-08-11 07:52 GMT   |   Update On 2020-08-11 07:52 GMT
சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டங்களில் 284 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் 10-ம் வகுப்பில் படித்த 9,117 மாணவர்கள், 9,031 மாணவிகள் என மொத்தம் 18,148 மாணவ- மாணவிகள் அரசு பொதுத்தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ- மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News