செய்திகள்
தா.பழூர் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 40). விவசாய கூலி தொழிலாளியான இவர், தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக மின்மோட்டார் பொருத்தும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முருகானந்தம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது மனைவி அமுதவள்ளி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.