செய்திகள்
விலையில்லா முக கவசங்கள் வழங்கும் பணி அரசு கொறடா தொடங்கி வைத்தார்

ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முக கவசங்கள் வழங்கும் பணி

Published On 2020-08-09 07:50 GMT   |   Update On 2020-08-09 07:50 GMT
அரியலூரில் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முக கவசங்கள் வழங்கும் பணியை அரசு கொறடா தொடங்கி வைத்தார்.
அரியலூர்:

அரியலூர் ரெயில்வே நிலைய சாலையில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு விலையில்லா முக கவசங்கள் வழங்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 2 முக கவசங்களை வழங்கி, அந்த பணியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News