செய்திகள்
திருப்பத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கம்பனூர், தென்கரை ஆகிய வன பகுதியில் உள்ள ஏராளமான மான்கள் தண்ணீர் தேடி சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கியும், நாய்களிடம் கடிபட்டும் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுதவிர தற்போது காடு மற்றும் விவசாய நிலங்களை அழித்து, அவற்றில் முள்வேலி அமைத்து வீடு கட்டி வருவதால் காட்டில் வாழும் மான்கள், மலைபாம்பு ஆகியவை தொடர்ந்து ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூர் அருகே தம்பிபட்டி பகுதியில் புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது அங்கிருந்த நாய்கள் அதை விரட்டி சென்று கடித்தன. இதில் அந்த புள்ளி மான் இறந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புள்ளி மானை கைப்பற்றி திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் முன்னிலையில் உடல்கூறு பரிசோதனை செய்து வனச்சரக அலுவலக வன பகுதியில் புதைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கம்பனூர், தென்கரை ஆகிய வன பகுதியில் உள்ள ஏராளமான மான்கள் தண்ணீர் தேடி சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கியும், நாய்களிடம் கடிபட்டும் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுதவிர தற்போது காடு மற்றும் விவசாய நிலங்களை அழித்து, அவற்றில் முள்வேலி அமைத்து வீடு கட்டி வருவதால் காட்டில் வாழும் மான்கள், மலைபாம்பு ஆகியவை தொடர்ந்து ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூர் அருகே தம்பிபட்டி பகுதியில் புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது அங்கிருந்த நாய்கள் அதை விரட்டி சென்று கடித்தன. இதில் அந்த புள்ளி மான் இறந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புள்ளி மானை கைப்பற்றி திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் முன்னிலையில் உடல்கூறு பரிசோதனை செய்து வனச்சரக அலுவலக வன பகுதியில் புதைத்தனர்.