செய்திகள்
கோப்புபடம்

சாலைக்கிராமம், சூராணம் பகுதிகளில் மணல் அள்ள தடை - கோர்ட்டு உத்தரவு

Published On 2020-08-06 10:10 GMT   |   Update On 2020-08-06 10:10 GMT
இளையான்குடி அருகே சாலைக்கிராமம், சூராணம் பகுதிகளில் மணல் அள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இளையான்குடி:

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் மற்றும் சூராணம் பிர்காவில் உள்ள பகுதிகளில் சவடு மண் அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று, அரசின் விதிமுறைகளை மீறி மணல் கடத்தல்காரர்கள் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தனர். இதுகுறித்து சாலைக்கிராமம் விவசாயி ராதாகிருஷ்ணன் மற்றும் சமுத்திரம் கணேசன் ஆகியோர் இளையான்குடி இலவச சட்ட உதவி மையத்தை நாடினர். 

இலவச சட்ட உதவி மைய வக்கீல் அண்ணாதுரை மூலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜா மாவட்ட கலெக்டரின் உத்தரவை மீறி மணல் அள்ள சாலைக்கிராமம் மற்றும் சூராணம் பகுதிகளில் மணல் அள்ள தடை உத்தரவு பிறப்பித்தார்.
Tags:    

Similar News