செய்திகள்
கலெக்டர் கதிரவன்

பெருந்துறை அருகே வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2020-08-04 08:43 GMT   |   Update On 2020-08-04 08:43 GMT
பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.
பெருந்துறை:

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். குள்ளம்பாளையம் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் ஜல்சக்தி மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்து 88 ஆயிரம் செலவில் 701 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியையும், திங்களூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கிராம சந்தையையும், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கான கட்டிடத்தையும் அவர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிமாலா, மோகன், உதவி பொறியாளர் அட்சயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News