செய்திகள்
சேத்தியாத்தோப்பு அருகே கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
சேத்தியாத்தோப்பு மனித உரிமை கழகம் மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி கிராமத்தில் சேத்தியாத்தோப்பு மனித உரிமை கழகம் மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மனித உரிமை கழக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ஆனந்தபாபு தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் சந்தோஷ் ஞானசேகரன், ஒன்றிய செயலாளர் பந்தல்ராஜா, பன்னீர்செல்வம், தமிழரசன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.