செய்திகள்
கோப்புபடம்

புதுப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி

Published On 2020-07-30 15:50 GMT   |   Update On 2020-07-30 15:50 GMT
புதுப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை:

புதுப்பேட்டை அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி சத்யா (வயது 45). இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று காலை இவர் தனது வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க சுவிட்சை ஆன் செய்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், தீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் இறந்த சத்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது கணவர் ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News