செய்திகள்
புஞ்சைபுளியம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
புஞ்சைபுளியம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன்பாளையத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதர் அருகே 3 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாரியண்ணன் (வயது 65), லோகேஸ் (27), சந்தோஷ்குமார் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 160 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.