செய்திகள்
வேலைநிறுத்த போராட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்

Published On 2020-07-28 14:03 IST   |   Update On 2020-07-28 14:03:00 IST
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அனைத்து கடன்களையும் சங்கத்தின் மூலம் வழங்க வேண்டும். கொரோனா காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரேசன்கடை பணியாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்த கமிட்டியை அமைப்பதுடன் அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட செயலாளர் சேகர், ஒன்றிய தலைவர் விஜயகுமார், பொருளாளர் கோவிந்தராஜலு உள்பட பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Similar News