செய்திகள்
முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.86 ஆயிரம் அபராதம் வசூல்
ஊட்டி நகராட்சியில் இதுவரை நோய் தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்தததாக ரூ.86 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களை கண்டறிந்து பறக்கும் படையினர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊட்டியில் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு வருபவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா என்று சோதனை செய்து வருகிறார்கள். சோதனையின் போது முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்படுகிறது. ஊட்டி நகராட்சியில் இதுவரை நோய் தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்தததாக ரூ.86 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது.