செய்திகள்
கைது

மணல் கடத்தியவர் கைது

Published On 2020-07-19 16:08 IST   |   Update On 2020-07-19 16:08:00 IST
மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆளவாய் கிராம பாலாற்றில் சிலர் மணல் கடத்துவதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு டிராக்டரில் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையொட்டி டிராக்டரை ஓட்டி வந்த குன்னப்பட்டு கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் கைப்பற்றப்பட்டது. அத்துடன் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர். வாகனங்களை ஓட்டி வந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Similar News