செய்திகள்
கைது

அச்சரப்பாக்கம் அருகே எரிசாராயம் கடத்திய வழக்கில் 3 பேர் கைது

Published On 2020-07-17 20:27 IST   |   Update On 2020-07-17 20:27:00 IST
அச்சரப்பாக்கம் அருகே எரிசாராயம் கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த ஒரத்தி அருகே கடந்த 4-ந்தேதி மினி கன்டெய்னர் லாரியில் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 5 ஆயிரத்து 320 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றினர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். தப்பியோடிய மாரி என்ற நண்டு மாரி, (வயது 55), விமல்ராஜ் (28), சுந்தரமூர்த்தி என்ற வேல்முருகன் (36) ஆகியோரை தற்போது அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், சண்முகம், கமலக்கண்ணன் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Similar News