செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவர்கள்- முதலமைச்சர் நாராயணசாமி

Published On 2020-07-07 10:38 GMT   |   Update On 2020-07-07 10:38 GMT
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை தர முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 719665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 467 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20160 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 439948 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 15515 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 259557 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

புதுச்சேரியில் இன்று மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை தர  முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு வாரத்தில் கொரோனா சோதனை மையம் அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.






Tags:    

Similar News