செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை கொள்ளை

Published On 2020-07-07 08:16 GMT   |   Update On 2020-07-07 08:16 GMT
சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் மகன் அப்துல் கபார் (வயது 33). இவர் சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் புதுச்சேரி சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்துல்கபார் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அதில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 5½ பவுன் நகையை காணவில்லை. அப்துல் கபார் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News