செய்திகள்
மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கவர்னர் வலியுறுத்தல்
மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாம் தொற்று நோய் வழக்கு சம்பந்தமான பதிவுகளை அதிகப்படுத்தும்போது, அது நமது பாதுகாப்பை பலப்படுத்தும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மிகவும் குறைவாக உள்ளது. உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களின் மூலம் இதை இன்னும் நன்றாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் துறையும் செயல்பாட்டினை அதிகப்படுத்த வேண்டும்.
இன்னும் முககவசத்தை அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். இந்த விளக்க அறிக்கையை பார்த்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் மக்களை பாதிக்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.