செய்திகள்
கைது

மீன்சுருட்டி அருகே தகராறில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2020-07-04 06:14 GMT   |   Update On 2020-07-04 06:14 GMT
மீன்சுருட்டி அருகே தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கீழவீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன் மனைவி வனிதா(வயது 35). தனது வீட்டின் அருகில் இருந்த ஜல்லிக்கற்களை அவருடைய மாமனார் எடுத்து வந்தபோது, அவருடைய உறவினர்கள் எப்படி நீங்கள் அதனை எடுக்கலாம் என்று கேட்டு திட்டி வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி உங்களை கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று கூறி மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து வனிதா கொடுத்த புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வளையாபதி மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி மனைவி ஜெயந்தி(39), பாலகிருஷ்ணன்(34), சின்னதுரை(68), அவருடைய மனைவி பானுமதி(60) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News