செய்திகள்
பாய்லர் வெடித்து விபத்து (கோப்பு படம்)

என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 6 தொழிலாளர்கள் பலி

Published On 2020-07-01 11:41 IST   |   Update On 2020-07-01 15:17:00 IST
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர்.
நெய்வேலி:

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.

இவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி உள்ளார்.

என்எல்சியில் இரண்டு மாதங்களுக்குள் நடந்த இரண்டாவது விபத்து இதுவாகும். இதற்கு முன்பு மே மாதம் நடந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Similar News