செய்திகள்
கைது

பண்ருட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2020-06-30 12:46 GMT   |   Update On 2020-06-30 12:46 GMT
பண்ருட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவதிகை செட்டி பட்டறை காலனி அருகில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று 3 பேரை மடக்கிப்பிடித்தனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(வயது 30), சிவனேசன்(33), ராஜசேகர்(35) ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர்கள் ராஜா, ரகு, திலீப், சக்திவேல் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சிலம்பரசன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News