செய்திகள்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
புதுப்பேட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுப்பேட்டை:
தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் புதுப்பேட்டை போலீசார், பொதுமக்கள் முககவசம் அணிந்து வருகிறார்களா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.100 அபராதம் விதித்து எச்சரித்தனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், செல்வம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் புதுப்பேட்டை போலீசார், பொதுமக்கள் முககவசம் அணிந்து வருகிறார்களா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.100 அபராதம் விதித்து எச்சரித்தனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், செல்வம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.