செய்திகள்
சிறுத்தைப்புலி

குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம்

Published On 2020-06-27 16:49 IST   |   Update On 2020-06-27 16:49:00 IST
குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
குன்னூர்:

குன்னூர் அருகே உள்ளது அட்டடி குடியிருப்பு பகுதி. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்களும், அதனை சுற்றிலும் வனப்பகுதிகளும் காணப்படுகிறது. அட்டடி குடியிருப்பு பகுதி மக்கள் பெரும்பாலும் தொழிலாளர்களாக இருப்பதால், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அட்டடி குடியிருப்பு பகுதியை சுற்றி உள்ள தேயிலை தோட்டங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. தினமும் மாலை வேளையில் தேயிலை தோட்டங்களில் உள்ள பாறைகளில் சிறுத்தைப்புலி ஓய்வெடுப்பதை காண முடிகிறது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிகளில் விட வேண்டும் என்று அவர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News