செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நீலகிரியில் 7 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-27 12:30 IST   |   Update On 2020-06-27 12:30:00 IST
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஊட்டி:

ஊட்டி அருகே தனியார் ஊசி தொழிற்சாலையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் தொடர்பில் இருந்த மந்தாடா புதுலைன் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய 2 பெண்கள், குன்னூர் குரூஸ்பேட் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண், 18 வயதுடைய ஆண், அருவங்காட்டை சேர்ந்த 58 வயதுடைய ஆண், எல்லநள்ளியை சேர்ந்த 35 வயதுடைய ஆண் என 6 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் வெளிமாவட்டத்துக்கு சென்று வந்த காந்தல் இந்திரா காலனியை சேர்ந்த 65 வயதுடைய முதியவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து உள்ளது. அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கேத்தி பேரூராட்சியில் 10 தொழிலாளர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளாமல், தொற்றை பரப்பும் வகையில் வெளியே நடமாடியதாக கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 10 பேர் மீது கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Similar News