செய்திகள்
யானை

கூடலூர் அருகே காட்டுயானை அட்டகாசம்

Published On 2020-06-26 13:25 GMT   |   Update On 2020-06-26 13:25 GMT
கூடலூர் அருகே காட்டுயானை புகுந்து வாழைகளை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் அருகே புளியாம்பாரா பகுதிக்குள் கடந்த சில நாட்களாக காட்டுயானை புகுந்து, வாழைகளை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேவாலா வனத்துறையிடம் புகார் தெரிவித்தும், காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இனிமேலாவது அட்டகாசம் செய்யும் காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News