செய்திகள்
கீழடியில் அகழாய்வு

கீழடியில் அகழாய்வு பணி- அகரத்தில் குவளை, பானைகள் கண்டுபிடிப்பு

Published On 2020-06-24 08:12 GMT   |   Update On 2020-06-24 08:12 GMT
கீழடியில் அகழாய்வு பணியில் அகரத்தில் சிறிய குவளை மற்றும் சுற்று சுவர்களில் சிறிய பானைகள் தென்பட்டன.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. நேற்று அகரத்தில் சிறிய குவளை மற்றும் சுற்று சுவர்களில் சிறிய பானைகள் தென்பட்டன. இங்கு ஏற்கனவே சிறிய மண்பானைகள், நத்தை ஓடுகள், தங்க நாணயம், சங்கு வளையல்கள், மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பழங்கால பெண்கள் பயன்படுத்திய அம்மிக்கல்லின் அரவைக்கல் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகையில் உள்ள முதுமக்கள் தாழியில் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் மற்றும் சிறிய குவளை போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் செங்கல் கட்டிடப் பகுதி, பானைகள், விலங்கின எலும்புக்கூடு, மண் உலை பகுதி அருகே நெருப்பு கட்டமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News