செய்திகள்
கடற்கரை யோரத்தில் கிடந்த 4 கிலோ போதைப்பொருட்கள் - போலீசார் விசாரணை
கடற்கரை யோரத்தில் கிடந்த 4 கிலோ போதைப்பொருட்களை கைப்பற்றிய கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பரங்கிப்பேட்டை:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது புதுப்பேட்டை. இந்த கிராமத்தில் உள்ள கடற்கரையோரம் மர்மபொருள் ஒன்று கிடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது போதைப்பொருட்கள் என்பதும், சுமார் 4 கிலோ எடை கொண்டது எனவும் தெரியவந்தது.
மேலும் அந்த பொருளின் கவரில் சீன எழுத்தில் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது புதுப்பேட்டை. இந்த கிராமத்தில் உள்ள கடற்கரையோரம் மர்மபொருள் ஒன்று கிடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது போதைப்பொருட்கள் என்பதும், சுமார் 4 கிலோ எடை கொண்டது எனவும் தெரியவந்தது.
மேலும் அந்த பொருளின் கவரில் சீன எழுத்தில் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.