செய்திகள்
கைது

மொபட்டில் மணல் கடத்தியவர் கைது

Published On 2020-06-17 12:23 GMT   |   Update On 2020-06-17 12:23 GMT
புதுவை அருகே மொபட்டில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கொம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் எதிரே மொபட்டில் சாக்கு மூட்டைகளுடன் ஒருவர் வந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

இதையடுத்து அவர் வைத்திருந்த மூட்டைகளை சோதனையிட்டபோது, அதில் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொம்பாக்கம் புதுநகரை சேர்ந்த இருதயராஜ் (வயது 37) என்பதும், அப்பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் எடுத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய மொபட் மற்றும் 3 மூட்டை மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News