செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

சீன தாக்குதலில் இந்திய வீரர்கள் வீரமரணம் : முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல்

Published On 2020-06-17 10:58 GMT   |   Update On 2020-06-17 10:58 GMT
சீன ராணுவத்துடனான தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

சீன ராணுவத்துடனான தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய எல்லையை பாதுகாக்கும்போது சீன ராணுவத்தோடு நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இறந்த வீரர்கள் தங்களது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர். நமது எல்லையை எந்த விலை கொடுத்தாலும் பாதுகாப்போம். நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News