செய்திகள்
நாகை மாவட்டத்தில் ரூ.1½ கோடியில் குடிமராமத்து திட்ட பணிகள் - அதிகாரி ஆய்வு
நாகை மாவட்டத்தில் குடிமராமத்து திட்ட பணிகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள ஆனைக்கோவில், திருப்பயத்தங்குடி கிராமத்தில் உள்ள வளப்பாற்றை தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. ராதாரம்பூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி ஆகிய கிராமங்களில் நரிமனியார் வடிகால் வாய்க்கால் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகிறது. அங்கு மண் திட்டுகளும் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் வீரமுட்டி வாய்க்கால், கீழ்வேளூர் அருகே பாலக்குறிச்சி கிராமத்தில் மரவனாறு வாய்க்கால், பாலக்குறிச்சி வாய்க்கால், நந்தனம் வாய்க்கால், குதிரைசேவகனாறு வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
இவை உள்பட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் சுமார் 1,071 கி.மீ. தொலைவுக்கு 80 பணிகளும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 131 பணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
234 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரும் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, அதில் 101 பணிகள் நிறைவடைந்துள்ளன. 370 குளங்களை விரைவில் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் பழனிகுமார், காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், செயற்பொறியாளர் ராஜன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கமலக்கண்ணன், உதவி பொறியாளர்கள் செல்வபாரதி, செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகை அருகே உள்ள ஆனைக்கோவில், திருப்பயத்தங்குடி கிராமத்தில் உள்ள வளப்பாற்றை தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. ராதாரம்பூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி ஆகிய கிராமங்களில் நரிமனியார் வடிகால் வாய்க்கால் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகிறது. அங்கு மண் திட்டுகளும் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் வீரமுட்டி வாய்க்கால், கீழ்வேளூர் அருகே பாலக்குறிச்சி கிராமத்தில் மரவனாறு வாய்க்கால், பாலக்குறிச்சி வாய்க்கால், நந்தனம் வாய்க்கால், குதிரைசேவகனாறு வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
இவை உள்பட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் சுமார் 1,071 கி.மீ. தொலைவுக்கு 80 பணிகளும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 131 பணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
234 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரும் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, அதில் 101 பணிகள் நிறைவடைந்துள்ளன. 370 குளங்களை விரைவில் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் பழனிகுமார், காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், செயற்பொறியாளர் ராஜன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கமலக்கண்ணன், உதவி பொறியாளர்கள் செல்வபாரதி, செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.