செய்திகள்
கோத்தகிரியில் முகக்கவசம் அணியாத 13 பேருக்கு அபராதம்
கோத்தகிரியில் முகக்கவசம் அணியாத 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோத்தகிரி:
கொரோனா தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை கண்டறிந்து பல்வேறு துறை அரசு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கோத்தகிரி திறந்தவெளி மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது முகக்கவசம் அணியாமல் கடைகளில் நின்று வியாபாரம் செய்து கொண்டு இருந்த வியாபாரிகள் உள்பட 13 பேருக்கு தலா ரூ.50 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
கொரோனா தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை கண்டறிந்து பல்வேறு துறை அரசு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கோத்தகிரி திறந்தவெளி மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது முகக்கவசம் அணியாமல் கடைகளில் நின்று வியாபாரம் செய்து கொண்டு இருந்த வியாபாரிகள் உள்பட 13 பேருக்கு தலா ரூ.50 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.