செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

கொள்ளிடம் பகுதியில் 16-ந் தேதி மின்தடை

Published On 2020-06-14 16:08 IST   |   Update On 2020-06-14 16:08:00 IST
கொள்ளிடம் பகுதியில் 16-ந் தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
சீர்காழி:

சீர்காழி அருகே உள்ள அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய இடங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், எருக்கூர், மாதிரவேலூர், வடரெங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், ஆனைக்காரன் சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழைய பாளையம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், அரசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் கூறினார். 

Similar News