செய்திகள்
பணம் கொள்ளை

வேதாரண்யம் அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை - ரூ.50 ஆயிரம் கொள்ளை

Published On 2020-06-13 10:21 GMT   |   Update On 2020-06-13 10:21 GMT
வேதாரண்யம் அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி கொல்லைக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது45). இவர் கருப்பம் புலத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டு வாசல் கதவை திறந்து வைத்து விட்டு தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பகுதியில் உள்ள வளாகத்தில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்தவர்களை தாண்டி உள்ளே சென்று கதவை உள்பக்கமாக தாழ்ப் பாள் போட்டுவிட்டு வீட்டில் இருந்த 9 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு பின் பக்க கதவு வழியாக தப்பி சென்றனர்.

செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் மோப்ப நாயுடன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதே போல தடயவியல் நிபுணர்கள் மூலமாக தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News