செய்திகள்
பஸ் போக்குவரத்து

நீலகிரி மாவட்டத்தில் எல்லையோர கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கம்

Published On 2020-06-03 12:39 GMT   |   Update On 2020-06-03 12:39 GMT
நீலகிரி மாவட்டத்தில் எல்லையோர கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தமிழக கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ளது கிண்ணக்கொரை. இதை சுற்றிலும் கிண்ணக்கொரை ஆடா, ஒசாட்டி, மேலூர், பிக்கட்டி, அப்பட்டி, இந்திராநகர், ஜே.ஜே.நகர், காமராஜ்நகர், தனயகண்டி, இரியசீகை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதில் தனயகண்டி மற்றும் ஜே.ஜே.நகர் கிராமங்களில் ஆதிவாசி குடும்பங்கள் வசிக்கின்றனர்.

அனைத்தும் குக்கிராமங் களாக உள்ளது. இவர்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக கிண்ணக்கொரை பகுதியில் மட்டும் ஓரிரு சிறிய கடைகள் மட்டுமே உள்ளது. இந்த கடைகளிலும் குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே கிடைக்கிறது. பெருமளவு காய்கறி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து கடைகளுக்கு சுமார் 30 கி.மீ தொலைவுள்ள மஞ்சூர் பகுதிக்கே சென்று வர வேண்டியுள்ளது. பெரும்பாலான மக்களும் தங்களது போக்குவரத்து வசதிக்கு அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கிண்ணக்கொரை கிராமத்திற்கு அரசு பஸ், தனியார் வாகன போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப் பட்டதை தொடர்ந்து நேற்று முதல் கிண்ணக்கொரை கிராமத்திற்கு அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக போக்குவரத்து வசதி இல்லாததால் வெளியிடங்களுக்கு செல்ல முடி யாமல் கிராமங்களில் முடங்கி கிடந்த பெரும்பாலானோர் அரசு பஸ்களில் முக கவசத் துடன் மஞ்சூர் பகுதிக்கு சென்று வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

இதேபோல் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, காரமடை வழியாக கோவைக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

Tags:    

Similar News