செய்திகள்
தீ விபத்து

காஞ்சிபுரம் அருகே குடிசை எரிந்து சாம்பல்

Published On 2020-05-31 09:13 GMT   |   Update On 2020-05-31 09:13 GMT
காஞ்சிபுரம் அருகே குடிசை எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகல் பகுதியில் உள்ள தெருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 40). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனி நேற்று வடகல் பகுதிக்கு நேரில் சென்று தேவதாஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதிஉதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது மாவட்ட அ.தி.மு.க துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றனர்.
Tags:    

Similar News