செய்திகள்
உயிரிழப்பு

தஞ்சை அருகே ஏணியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

Published On 2020-05-30 15:36 IST   |   Update On 2020-05-30 15:36:00 IST
தஞ்சை அருகே ஏணியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சையை அடுத்த பழையகல்விராயன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்தவர் மருதையன் (வயது 75). விவசாயி. இவர் நேற்று முன் தினம் வீட்டின் வெளியே உள்ள கூரையின் மேல் ஏணியில் ஏறி கயிரை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி ஏணியில் இருந்து கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.

அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் இழந்தார். கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News