செய்திகள்
திருப்புறம்பியத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை- 2 பேர் கைது
திருப்புறம்பியத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுவாமிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து, போலீசார், திருப்புறம்பியம் பகுதியில் சோதனை செய்த போது, திருப்புறம்பியம், குளத்தங்கரை சேர்ந்த பழனிச்சாமி (50), உச்சிகட்டளை தெருவை சேர்ந்த சிலம்பரசன் (30) ஆகியோர் பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததையடுத்து, போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.