செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2020-05-30 12:35 IST   |   Update On 2020-05-30 12:35:00 IST
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனையில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனாவிலிருந்து குணமடைவோர் தமிழகத்தில் தான் அதிகம். பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வங்கிகள் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டையை வங்கிகள் வழங்க வேண்டும்.

ஊரக தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Similar News