செய்திகள்
கைது

பெண்ணாடம் அருகே மது விற்ற பெண் உள்பட 15 பேர் கைது

Published On 2020-05-30 12:19 IST   |   Update On 2020-05-30 12:19:00 IST
பெண்ணாடம் அருகே மது விற்ற பெண் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணாடம்:

பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துறையூரில் வீட்டில் பதுக்கி மது விற்பனை செய்த பிரபு, வெண்ணங்கரும்பூர் பழைய காலனி பகுதியை சேர்ந்த கலையரசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பெலாந்துறையில் ஒரு வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து மது விற்ற சின்னதுரை, அன்புராஜ், சேதுராமன், உஷா, டி.பவழங்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News