செய்திகள்
கைது

வேதாரண்யத்தில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Published On 2020-05-28 14:40 IST   |   Update On 2020-05-28 14:40:00 IST
வேதாரண்யத்தில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் பாப்புரெட்டி குத்தகையைச் சேர்ந்தவர் வைரப்பன் மகன் அண்ணாத்துரை (வயது 50). இவரது வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில் உரிமம் இல்லாத துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

வாய்மேடு காவல் நிலையத்தில் துப்பாக்கி உரிமம் பதிவேட்டை சோதனை செய்ததில் இவர் வைத்திருந்த எஸ்.பி.எம்.எல். உரிமம் யாருக்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அண்ணாத்துரையை காவல்நிலையத்தில் வைத்து துப்பாக்கி எப்படி கிடைத்தது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News