செய்திகள்
தற்கொலை

நந்திவரம் பஸ் நிலையத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-05-27 11:09 GMT   |   Update On 2020-05-27 11:09 GMT
நந்திவரம் பஸ் நிலையத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பஸ் நிலையத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை, எதற்காக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News