செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2020-05-27 05:39 GMT   |   Update On 2020-05-27 05:39 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 890-ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 127-ஆக உள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 857 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News