செய்திகள்
அரிசி

ஆலங்குடி அரசு பள்ளி மாணவிகளுக்கு மளிகை பொருட்கள்

Published On 2020-05-25 10:26 GMT   |   Update On 2020-05-25 10:26 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆலங்குடி:

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் கவுசல்யா தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு ரூ.50ஆயிரம் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News