செய்திகள்
விபத்து பலி

அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பலி

Published On 2020-05-25 12:11 IST   |   Update On 2020-05-25 12:11:00 IST
அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார், அவருக்கு 40 வயது இருக்கும். பச்சை நிறத்தில் பல டிசைன் கொண்ட ஜாக்கெட்டும், புள்ளிகள் போட்ட சிவப்பு நிற சேலையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லைல.

இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News