செய்திகள்
மரணம்

கீழ்வேளூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

Published On 2020-05-24 09:36 GMT   |   Update On 2020-05-24 09:36 GMT
கீழ்வேளூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே கூத்தூர் வண்ணான் குளத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது40). சம்பவத்தன்று, இவர் அதே ஊரை சேர்ந்த திருஞானம் என்பவர் வீட்டில் உள்ள புளியமரத்தில் ஏறினார். அப்போது திடீரென மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News