செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுவையில் 25 பேருக்கு கொரோனா சிகிச்சை- அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்

Published On 2020-05-23 10:42 GMT   |   Update On 2020-05-23 10:42 GMT
புதுவையில் தற்போது 23 பேரும், மாகியில் 2 என மொத்தம் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவையில் நேற்று மாலை 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை வடமங்கலம், குரும்பாபேட், வேல்முருகன் நகரை சேர்ந்த தலா ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுடன் இருந்தவர்களுடன் தொடர்புடையவர்கள். இதன்மூலம் புதுவையில் தற்போது 23 பேரும், மாகியில் 2 என மொத்தம் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்காலில் சிகிச்சை பெற்றவர் வீடு திரும்பிவிட்டார். இந்த பட்டியலில் கேரளா மாநிலம் கன்னூர், சென்னை, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் புதுவையை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு திரும்புவோர்களால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News