செய்திகள்
டிக்டாக் வீடியோ எடுத்து பதிவேற்றம்- காவல் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய வாலிபர் கைது
சீர்காழியில் போலீஸ் நிலையம் முன்பு டிக்டாக் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த காவல் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியை சேர்ந்தவர் கமலகண்ணன் (வயது 30). எலக்ட்ரீசியன். நீண்ட காலமாக டிக்டாக் செயலியில் பல்வேறு வீடியோ பதிவுகளை பதிவேற்றியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக காவல்துறையினருக்கு உதவியாக அமைக்கப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் தேர்வாகி சீர்காழி போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு உதவி செய்து வந்தார்.
இந்நிலையில் போலீசாருக்கு தெரியாமல் காவல் நிலையம் முன்பும், காவலர்களுடனும் இருக்கும் வீடியோக்களை சில திரைப்பட வசனங்களுடன் இணைத்து டிக்டாக்கில் பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் சீர்காழி போலீசார், இளைஞர் கமலகண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியை சேர்ந்தவர் கமலகண்ணன் (வயது 30). எலக்ட்ரீசியன். நீண்ட காலமாக டிக்டாக் செயலியில் பல்வேறு வீடியோ பதிவுகளை பதிவேற்றியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக காவல்துறையினருக்கு உதவியாக அமைக்கப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் தேர்வாகி சீர்காழி போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு உதவி செய்து வந்தார்.
இந்நிலையில் போலீசாருக்கு தெரியாமல் காவல் நிலையம் முன்பும், காவலர்களுடனும் இருக்கும் வீடியோக்களை சில திரைப்பட வசனங்களுடன் இணைத்து டிக்டாக்கில் பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் சீர்காழி போலீசார், இளைஞர் கமலகண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.