செய்திகள்
கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு- அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவையில் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், கலெக்டர் அருண், சுகாதாரத்துறை செயலர் பிரசாந்தகுமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதலாக என்ன கட்டுப்பாடுகள் விதிப்பது, என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டது.
புதுவையில் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், கலெக்டர் அருண், சுகாதாரத்துறை செயலர் பிரசாந்தகுமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதலாக என்ன கட்டுப்பாடுகள் விதிப்பது, என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டது.