செய்திகள்
கைது

குடும்ப பிரச்சினையில் தம்பி மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்த வாலிபர் கைது

Published On 2020-05-22 11:17 GMT   |   Update On 2020-05-22 11:19 GMT
அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சினையில் தம்பி மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே அரசர்குளம் வடபாதியை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன்கள் சண்முகசுந்தரம் (வயது 28), கலையரசன் (26). இதில் கலையரசன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில் குடும்ப பிரச்சினையின் காரணமாக நேற்றுமுன்தினம் சண்முகசுந்தரம் அவரது தம்பி கலையரசன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீக்காயமடைந்த கலையரசனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் வழக்குப்பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News