செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் பணி- நாராயணசாமி தொடங்கி வைத்தார்
மதகடிப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல் ரகங்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி, பார்வையிட்டு நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயரிம் மெட்ரிக் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக்கழகம் நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுவை, காரைக்காலில் மே 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்.
இதன்படி புதுவையில் தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூர், காரைக்கால், தென்னங்குடி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.
மதகடிப்பட்டு ஒழுங்கு முறை விற்பனைக்கூட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இந்திய உணவுக்கழகம் மூலம் நெல்கொள்முதல் பணி தொடங்கியது.
வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், அமைச்சர் கந்தசாமி, செயலாளர் அன்பரசு முன்னிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பணிகளை தொடங்கி வைத்தார்.
விவசாயிகளிடம் இருந்து சன்னரகம் குவிண்டால் ரூ.1835, மோட்டா ரகம் ரூ.1815க்கு இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்தது.
நிகழ்ச்சியில் இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் இயக்குனர் வசந்தகுமார், விற்பனைக்கூட செயலாளர் செழியன்பாடு, வேளாண் அலுவலர் தமிழ்செல்வன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயரிம் மெட்ரிக் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக்கழகம் நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுவை, காரைக்காலில் மே 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்.
இதன்படி புதுவையில் தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூர், காரைக்கால், தென்னங்குடி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.
மதகடிப்பட்டு ஒழுங்கு முறை விற்பனைக்கூட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இந்திய உணவுக்கழகம் மூலம் நெல்கொள்முதல் பணி தொடங்கியது.
வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், அமைச்சர் கந்தசாமி, செயலாளர் அன்பரசு முன்னிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பணிகளை தொடங்கி வைத்தார்.
விவசாயிகளிடம் இருந்து சன்னரகம் குவிண்டால் ரூ.1835, மோட்டா ரகம் ரூ.1815க்கு இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்தது.
நிகழ்ச்சியில் இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் இயக்குனர் வசந்தகுமார், விற்பனைக்கூட செயலாளர் செழியன்பாடு, வேளாண் அலுவலர் தமிழ்செல்வன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.