செய்திகள்
விபத்து

திருபுவனை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

Published On 2020-05-21 17:23 IST   |   Update On 2020-05-21 17:23:00 IST
திருபுவனை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:

விழுப்புரம் இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவர் தனது மனைவி குமாரி (வயது 36) என்பவருடன் வில்லியனூர் அருகே பெரியபாபு சமுத்திரத்தில் உள்ள பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் தங்கி வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று குமாரி அதே சூலையில் வேலை பார்க்கும் அஜித் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். திருபுவனை அருகே விநாயகம்பட்டு சாராயக்கடை அருகே சென்ற போது அங்கு சாலையில் பள்ளம் இருந்ததால் அஜித் திடீர் பிரேக் போட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து குமாரி தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை, கை, காலில் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து குமாரியின் கணவர் துரை வில்லியனூர் போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News