செய்திகள்
தற்கொலை

கணவன், குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2020-05-20 15:15 GMT   |   Update On 2020-05-20 15:15 GMT
புதுவை அருகே கணவன், குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:

புதுவை லிங்காரெட்டிப்பாளையம் பெரிய தெருவை சேர்ந்த சரண்யா (வயது30). இவருக்கும் திருபுவனையை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர், குழந்தைகளை பிரிந்து கடந்த மார்ச் மாதம் தனது தயார் வீட்டிற்கு சரண்யா தனியாக வந்தார்.

இந்தநிலையில் கணவர், குழந்தையை பிரிந்த ஏக்கம் சரண்யாவை வாட்டியது. இதனால் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமாகி 4 வருடங்களே ஆன நிலையில் சரண்யா தற்கொலை செய்து இருப்பதால் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.

Tags:    

Similar News